பல்லவி
ராம நினு வினா நனு ரக்ஷிம்பனொருல கான
சரணம்
சரணம் 1
தல்லி தண்ட்3ரியன்ன தம்முலு தை3வமு நீவனி
உல்லமுனனுயன்னிட நினு சல்லக3 பா3கு3க3 ஜூசெத3 (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நினு/ வினா/ நனு/ ரக்ஷிம்பனு/-ஒருல/ கான/
இராமா/ உன்னை/ அன்றி/ என்னை/ காப்பதற்கு/ மற்றவரை/ காணேன்/
சரணம்
சரணம் 1
தல்லி/ தண்ட்3ரி/-அன்ன/ தம்முலு/ தை3வமு/ நீவு/-அனி/
தாய்/ தந்தை/ அண்ணன்/ தம்பியர்/ தெய்வம்/ நீ/ என/
உல்லமுனனு/-அன்னிட/ நினு/ சல்லக3/ பா3கு3க3/ ஜூசெத3/ (ராம)
உள்ளத்தினில்/ யாவற்றிலும்/ உன்னை/ குளுமையாக/ நன்கு/ கண்டேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தூ3ஷிஞ்சின செடி3 போலேரு - தூ3ஷிஞ்சின செடி3 போயேரு : 'செடி3 போலேரு' என்பதற்கு 'கேடு உறார்' என்று பொருளாகும்; 'செடி3 போயேரு' என்பதற்கு 'கேடு உற்றனர்' என்று பொருளாகும். தியாகராஜர், இவ்விடத்தில், 'கேடு உறார்' என்று கூறுவதாகத் தோன்றுகின்றது.
'தூ3ஷிஞ்சின' என்ற சொல் எல்லா புத்தகங்களிலும் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 'செடி3 போலேரு' என்பதுதான் பொருந்தும். ஆயினும், 'தூ3ஷிஞ்சின' என்பதற்கு பதிலாக, 'தூ3ஷிஞ்சி' என்று கொடுத்திருந்தால், 'செடி3 போயேரு' என்பது பொருந்தலாம் - அதாவது '(உன்னைத்) தூற்றி கேடு உற்றனர்' என்று.
Top
மேற்கோள்கள்
2 - தூ3ஷிஞ்சின செடி3 போலேரு - உன்னைத் தூற்றினாலும் கேடு உறார் - இது குறித்து, பாகவத புராணத்தில் (7-வது புத்தகம், அத்தியாயம் 1) நாரதருக்கும், யுதிஷ்டிரருக்கும், சிசுபாலன், கண்ணனால் கொல்லப்பட்டதைப்பற்றி நடந்த உரையாடலினை நோக்கவும்.
Top
விளக்கம்
1 - பாலிஞ்சுனு மோக்ஷமொஸகு3 - பாதுகாக்கும் வீடருளும். இது ஸம்ஸ்கிருதத்தில் 'பு4க்தி-முக்தி' எனப்படும்.
வீடு - மோக்கம்
சத்துவம் - தூய்மை - முக்குணங்களிலொன்று
தத்துவம் - உட்பொருள்
Top